Sunday, October 26, 2025

Yes.A post worth reading

 A lady (85 yrs old), is thinking of leaving Mumbai and shifting to a senior citizens colony near Pune. Her husband passed away many years ago. 


She educated and married her three daughters who are now US citizens. They have two kids each of who is now in High School/College. The lady herself travelled to the US many times on her own. She lived there for six months or more, on six occasions, when her daughters delivered babies.


The other day, she became emotional and disclosed her plan to settle for assisted living in an old age home in Pune and that she had no intention to go back to the US for reasons of her own. 


One can feel her emotions very strongly, as all of us may have to face the same dilema in our sunset years too.


Please read the Article below. The lady was feeling the same way as the author of the Article, who has written this beautiful piece.


This Article on the internet has caused many to reflect on their own lives. The author is a retired writer, and she expressed her emotions when she was about to go to a nursing home herself. Read on.👇👇


*Relocating to a Nursing Home.* 


(in Western Countries, Retirement Homes are called Nursing Homes)


I'm going to a nursing home. I have to. When life gets to where you are, and you are no longer able to take care of yourself completely, your children are busy at work and have to take care of their children and have no time to take care of you, this seems to be the only way out.


The nursing home is in good condition, with clean single rooms equipped with simple and practical electrical appliances. All kinds of entertainment facilities are complete, the food is fairly delicious, the service is also very good. The environment is also very beautiful, but the price is not cheap.


My pension is poorly able to support this. But I have my own house. If I sell it, then the money is not a problem. I can spend it on retirement, and the rest will be left as an inheritance for my son. 


The son understands very well : "your money and your property should be enjoyed by you mom, don't worry about us." Now I have to consider preparing to go to a nursing home.


As the saying goes : Breaking a family is worth tens of thousands, which refers to many things. Boxes, bags, cabinets, and drawers are filled with all kinds of daily necessities: clothing for all weathers and beddings for all seasons.


I like to collect. I have collected a lot of stamps. I have also hundreds of purple clay teapots. There are many small collections, and such small items as pendants of emerald and walnut amber, and two small yellow croakers. 

I am especially fond of books. The bookshelves on the wall are full.


There are also dozens of bottles of good foreign wine. There are full sets of household appliances; various cooking utensils, pots and pans, rice, oil, salt, noodles, flour, spices, various seasonings the kitchen is also full. There are also dozens and dozens of photo albums..., looking at the house full of things, I'm worried!


The nursing home has only one room with a cabinet, a table, a bed, a sofa, a refrigerator, a washing machine, a TV, an induction cooker and a microwave oven -- all the things I will need. 

There is no place to store the wealth that I have accumulated throughout my life.


At this moment, I suddenly feel that my so-called wealth is superfluous, and it doesn't belong to me. I just take a look at it, play with it, use it. It belongs to this world. The wealth that comes in turns is just passing by. 

Whose palace is the Forbidden City? The Emperor thought it belonged to him, but today it belongs to the people and society.


You look at these, you play with these, you use these but you can't take them with you in death.


I want to donate the things in my house, but I can’t get it done. To deal with it has now become a problem. Very few children and grandchildren can appreciate what I have collected. I can imagine what it will be like when my children and grandchildren face these painstakingly accumulated treasures of mine: all the clothes and bedding will be thrown away; dozens of precious photos will be destroyed; books will be sold as scrap. Collections? If you are not interested, you will dispose of them. The mahogany furniture is not practical and will be sold at a low price.


Just like the end of the Red Mansion: only a piece of white left, so clean.


Facing with the mountain of clothes, I only picked a few favourites; I only kept a set of pots and pans for kitchen supplies, a few books that are worth reading; a handful of teapots for tea. 

Bring along my ID card, senior citizen certificate, health insurance card, household register, and of course a bank card. Enough!


It's all my belongings! I'm gone. I bid farewell to my neighbours, I knelt at the door and bowed three times and gave this home back to the world.


Yes! In life, you can only sleep in one bed, live in one room. Any more of it is merely for watching and playing!


Having lived a lifetime, people finally understand: we don’t need much. Don’t be shackled by superfluous things to be happy!


It's ridiculous to compete for fame and fortune. Life is no more than a bed.


For most of us, over 65 years of age already, shouldn’t we think carefully about how to take this last journey in life? 


*Let go of fantasies and baggage, and of those things that can't be eaten, worn or used. Most importantly.....try to remain Healthy and be Happy.*


A POST WORTH READING.

🙏😊🙏

Thursday, October 16, 2025

அன்றைய தீபாவளி...

 *அன்றைய தீபாவளி...🔥*

💥✨🌟💫⭐


அப்பாவிற்கு தீபாவளி போனஸ் வந்து விட்டது என்ற அம்மாவின் மந்திரச் சொல்லை கேட்டதில் ஆரம்பிக்கும் எங்களது தீபாவளி பண்டிகை...


வீடுகளில் பொருளாதார #சிக்கனம் காரணமாக ஒரே கலர் துணி எடுத்து அப்பாவிற்கு வேண்டிய டெய்லரிடம் மட்டுமே தைக்க கொடுக்க வேண்டும்..


வளரும் பையன்கள் என்பதற்காக கோமாளிகள் போடுவது மாதிரி தொளபுளா பேண்ட், சட்டை , தைத்து தருவார் அப்பாவின் அந்த #ஆஸ்தான டெய்லர் மாமா...


பெண் பிள்ளைகள் என்றாலே #பாவாடைதாவணி தான்..

அதில் பிரில் எனப்படும் லேஸ் வைத்து தைத்து தந்து விட்டால் ஏதோ #புதையலே கிடைத்தது போல்..


புதுப்படங்கள் போவதற்கு நமக்கு பர்மிஷனும் இருக்காது, துட்டும் இருக்காது.

அதனால் படம் பார்த்து விட்டு வந்த பெரிய அண்ணன்மார்களிடம் கதை கேட்டு ரசிப்போம்..


அதை விட கொடுமை அவர்களது சொந்த சொருகல்களையும் கேட்டுத்தான் ஆக வேண்டும்..


ஒரே ஒரு சீனிவெடி அல்லது ஓலை வெடி பாக்கெட்டை அண்ணன், தம்பிகளுக்குள் பங்கு பிரித்து வைத்துக்கொண்டு ஒவ்வொரு வெடியாக எண்ணி எண்ணி வெடித்தது..


தெருத்தெருவாக சென்று வெடிக்காத வெடிகளை பொறுக்கி வந்து புதுரக வெடிகளை தானாக தயார் செய்தது..


வெடிமருந்து அப்பிய கையோடு சாப்பிட அமர்ந்து அம்மாவிடம் அடி வாங்கியது..

.

பேப்பரில் வெடி மருந்துகளை மொத்தமாக சேர்த்து கொளுத்தும்போது ஏற்பட்ட தீக்காயம்.


தீபாவளிக்கு முந்தைய இரவு வரை தைக்க கொடுத்த துணிகள் வீடு வந்து சேரும் வரை எங்களது நிலை?!

வெடி வாங்கி வரும் அப்பாவின் வருகைக்காக வாசலில் வந்து வந்து எட்டிப் பார்த்து சென்றது..


காலையிலேயே தலைக்கு காய்ச்சிய எண்ணெய் தேய்த்து புலி அல்லது யானை மார்க் சீயக்காய் பொடி, ஆண்டாள் மார்க் பொடி தேய்த்து குளித்தது.


பெரும்பாலான வீடுகளில் அதிசயமாக இட்லி, தோசை சட்னி, மிளகாய் பொடி கூடவே தீபாவளி பலகாரங்கள்..


வெடிகளை கையில் பிடித்து எரிந்து பெரியவர்களிடம்

திட்டு வாங்கியது...


அண்ணே வெடி இருக்கு, அக்கா வெடி இருக்கு என்று

ரோட்டில் நடந்து வருபவர்களை ஓரமாக நடக்க வைத்து பயமுறுத்தியது...


பிடித்த ஆடைகளை வாங்க முடியாமல் விலை குறைவான ஆடைகளை வாங்கி, அப்பா அம்மாவிடம் கோபித்துக் கொண்டது...


இன்னமும் 20 நாள் இருக்கிறது, இன்னமும் 10நாள் இருக்கிறது என தீபாவளியின் வருகைக்காக நாட்களை எண்ணியது..


அம்மா அப்பா தாத்தா பாட்டி மாமா என அனைவரிடம் சேகரித்த தீபாவளி காசை கொஞ்சம் கொஞ்சமாக வைத்து செலவு செய்தது..


தீபாவளி விடுமுறை முடிந்து பள்ளிக்கு செல்லும்போது புத்தாடைகளை அணிந்து சென்று பந்தா காட்டியது ..

.

அம்மா ஒளித்து வைத்த பண்டங்களை யாருக்கும் தெரியாமல் திருடித் தின்றது..

.

ஊதுபத்தி"க்கு பதிலாக தேங்காய்நார் கயிற்றால் கொளுத்தி வெடிகளை வெடித்தது...


ஒரு மத்தாப்பு அணையப் போகிறது என்று தெரிந்ததும் இன்னொரு மத்தாப்பை அதிலேயே ஒட்டி வைத்து எரிய வைத்தது...


பாம்பு மாத்திரைகளை வரிசையாக அடுக்கி மாடர்ன் ஆர்ட் போல கொளுத்தியது..


வெடிக்காத லட்சுமி வெடிக்குள் சீனி வெடியை சொருகி பில்டப் செய்தது..


தேங்காய் சிரட்டைகளில் வெடிகளை அமுக்கி வைத்து வெடித்தது..


அப்போதெல்லாம் ராக்கெட் வெடி மட்டும் தான். பாட்டிலில் வைத்து ராக்கெட் வெடியை அனுப்புவார்கள்.

அதுவும் பணக்காரர்களின் வெடியாக மட்டுமே இருந்தது..


மொட்டை மாடியில் நின்றுகொண்டு ஆங்காங்கே வெடிக்கும் வானவேடிக்கைகளை பார்த்து கைதட்டி ரசித்தது..


வெடி பாக்கெட்களை கையில் பிடித்துக் கொள்ள அசிஸ்டென்ட்டை வைத்தது..


முப்பது வருடங்களுக்கு முன்பு நாங்கள் ப்ரியமாக கொண்டாடிய தீபாவளியை இப்போதைய சிறுவர்களும் இளைஞர்களும் கண்டிப்பாக கொண்டாட முடியவே முடியாது..


இப்போதைய தீபாவளி குடிப்பதற்கும், டிவியின் சிறப்பு நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கும், புதிய படம் பார்ப்பதற்கு மட்டுமே..


ஆனால்..


எங்களுடைய நாட்கள் (அப்போதைய 80,90,களின் தீபாவளி ) என்றும் காலத்தால் மறக்க முடியாதவை.


படித்ததில் மறக்கமுடியாதது......


Saturday, October 11, 2025

ஓம் திவ்ய தர்ஷன் சன்ஸ்தா

 இறந்தவர்களின் அஸ்தியை தபால் மூலம் புனித கங்கையில் கரைப்பது எப்படி?


உறவினர் ஒருவரின் மறைவிற்கு பின்பு அவரின் அஸ்தியை கங்கையில் கரைக்க எல்லோராலும் நேரில் பொருளாதார, மற்றும் சில காரணங்களால நேரில் செல்ல முடியாது. அதனால் அதை செய்ய முடியாமால் போய்விடுகிறது. அதற்கு  கால காலமாக நம் நினைவில் ஒரு நீங்கா நிராசையாக நின்று விடுவதுண்டு. அதற்காக RSS ன் "அஸ்தி விசர்ஜன்" அமைப்பும், Indian SPEED POST ம் இணைந்து அந்த சேவையை செய்து வருவது பலருக்கு தெரிவதில்லை. ஆம், அஸ்தி சாம்பலை இப்போது ஸ்பீட் போஸ்ட் வழியாக அனுப்பி, புனித கங்கையில் கரைக்கலாம், அவர்கள் செய்யும் சடங்குகளை நேரலையில் பார்க்கலாம்.


வாரணாசி, பிரயாக்ராஜ், ஹரித்வார் மற்றும் கயாவில் மக்கள் தங்கள் அன்புக்குரியவர்களின் மரணத்திற்குப் பிந்தைய சடங்குகளைச் செய்ய அனுமதிக்கும் சமூக-மத அமைப்பான 'ஓம் திவ்ய தர்ஷன்", உடன் இணைந்து புதிய முயற்சியை அஞ்சல் துறை அறிவித்துள்ளது என்று செய்தி நிறுவனம் ANI தெரிவித்துள்ளது


வசதியை எப்படிப் பெறுவது


1) முதலில் http://www.omdivyadarshan.org/ இல் உள்ள ஓம் திவ்ய தர்ஷன் சன்ஸ்தாவின் போர்ட்டலில் ஒருவர் இறந்தவர் பற்றிய விபரத்தை Google Form ல் பதிவு செய்து கொள்ள வேண்டும். 


பதிவு செய்ய கீழே இருக்கும் லிங்:

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfN3R-aP90EBEIXos_XOalJuRTgar8AhSU9ICrPk6cLRFDs_w/viewform


2) பதிவு செய்து அவர்களிடம் தொடர்பு கொண்டு பேசிய பின்புதான் சாம்பல் அனுப்ப வேண்டும். +91 83696 66626


3) பதிவுசெய்த பிறகு, சாம்பல் பொட்டலம் வாரணாசி, பிரயாக்ராஜ், ஹரித்வார் மற்றும் கயா/ஆகிய இடங்களுக்கு ஸ்பீட் போஸ்ட் மூலம் தபால் அலுவலகம் மூலம் அனுப்பப்படலாம். 


அதில் 'ஓம் திவ்ய தரிசனம்' என்று தடித்த எழுத்துக்களில் எழுத வேண்டும். ஸ்பீட் போஸ்ட்டை முன்பதிவு செய்த பிறகு, அனுப்புநர் போர்ட்டலில் முன்பதிவு விவரங்களுடன் அந்த அஸ்தியை அனுப்பிய தபால் பற்றிய தகவலை புதுப்பிக்க வேண்டும் 


4) இதற்குப் பிறகு, "ஓம் திவ்ய தர்ஷன் சன்ஸ்தா", சாம்பல் மூழ்குதல் மற்றும் பிற சடங்குகளை கவனித்துக் கொள்ளும். அந்த இறுதி சடங்குகளை இறந்தவரின் குடும்ப உறுப்பினர்கள் இங்கிருந்தே இணைய ஒளிபரப்பு மூலம் பார்க்க முடியும்.


நிறுவனம் பற்றி தொடர்பு கொள்ள பயன்பாட்டு விதிமுறைகளை தனியுரிமைக் கொள்கை ஆர்.எஸ்.எஸ் தொடர்பு கொள்க. 


குறிப்பு: 🙏  இது பற்றிய தகவல் எளிதாக கிடைப்பதில்லை. எனவே மற்றவர்களுடன் பகிர்ந்து புண்ணியம் தேடுங்கள்.  🙏 மேலும், இதை பயன்படுத்தியவர்கள் அனுபவத்தை கமெண்டில் பகிர்ந்தால் அது மற்றவர்களுக்கு உதவியாக இருக்கும். 🙏 இந்த வசதியை இங்கிருக்கும் மின்மயானங்கள் மூலம் செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

Saturday, October 4, 2025

எதற்காக..?

 அக்பர், ஒருநாள் தான்ஸேனிடம் கூறினார்: 

“உன் சங்கீதத்தைக் கேட்கும் போது உன்னைப் போல இசைப்பவர்கள் பூமியில் அபூர்வமாகத்தான் இருப்பார்கள் என்ற எண்ணம் எழுகிறது...

ஏனென்றால் இதை விட உயர்வாக எது இருக்க முடியும் என்ற அனுமானம்கூட எழ மறுக்கிறது. நீ சிகரமாக இருக்கிறாய்...

ஆனால் நேற்று இரவு உன்னை அனுப்பிவிட்டுப் படுக்கைக்குச் சென்றபின், அப்படி ஒருவர் இருக்க முடியுமோ என்று எனக்கு தோன்றியது...

நீயும் ஒருவரிடமிருந்து கற்றுக் கொண்டுதானே இருக்கிறாய்?  

உனக்கும் குரு இருக்கிறார் என்பது நினைவுக்கு வந்தது. அதனால் இன்று உன்னிடம் அதைப் பற்றிக் கேட்க விரும்புகிறேன். உன் குரு யார்?  

அவர் இருக்கிறார் அல்லவா?”


தான்ஸேன் பதிலளித்தார்:  

"என் குருவின் முன்னே,  

நான் ஒன்றுமே இல்லை...   

எனக்குக் கற்றுக் கொடுத்தவருடைய 

கால் தூசு கூட நான் பெற மாட்டேன்... அதனால் நான் சிகரம் என்ற எண்ணத்தை விட்டுவிடுங்கள்... தரையளவு கூட இல்லை...

தங்களுக்கு என்னை மட்டுமே தெரியும். அதனால் சிகரமாக நினைக்கிறீர்கள்...

ஒட்டகம், குன்றின் அருகே வந்த பின்தான், தான் குன்று அல்ல என்பதை உணர்கிறது. இல்லாவிட்டால் குன்று தன்னை விட சிறியது என நம்புகிறது...

குருவின் முன்னால் நான் ஒன்றுமே இல்லை. எப்போதும் குருவின் சரணங்களில் அமரும் பேறு கிடைத்தால், யோக்கியதை கிடைத்தாலே, எல்லாம் கிடைத்ததாக மகிழ்வேன்!" என்றார்...


அக்பர் உடனே, “உனது குரு உயிரோடு இருந்தால் இந்தக் கணமே அவரை இங்கே அழைத்து வா. நான் கேட்க விரும்புகிறேன்!" என்றார்...


தான்ஸேன், “அது சிரமம்! அவர் உயிரோடு இருக்கிறார். ஆனால் அவரை அழைத்து வர முடியாது," என்றார்...


அக்பர், "என்ன சன்மானம் வேண்டுமானாலும் கொடுத்து விடலாம்.. எதை விரும்புகிறாரோ அதைக் கொடுத்து விடலாம்.நீ கூறுவதை அளிக்கத் தயார்!" என்றார்.


தான்ஸேன், “சிரமம் அதுதான். அவரை, எதுவும் வாங்கிக் கொள்ளச் செய்வது முடியாது. எதுவும் வேண்டும் என்பது அவரிடம் கிடையாது!” என்றார்...


அக்பர் கேட்டார், "எந்த உபாயம் செய்ய முடியும்?" என்று...


தான்ஸேன், "இப்போது எதுவும் பிரயோசனமில்லை. நீங்கள் கேட்பதற்காகப் பாடுபவர் அல்ல அவர்... அவர் இசைத்துக் கொண்டிருக்கும்போது மட்டுமே கேட்க முடியும். அவர் எப்போது இசைக்கிறார் என்று கவனிக்கிறேன் பிறகு நாம் போகலாம்,'' என்று கூறி விடை பெற்றார்...


ஹரிதாஸ், தான்ஸேனுடைய குரு... 

யமுனா தீரத்தில் வசித்தார்.  

இரவு மூன்று மணிக்கு எழுந்து அவர் வாத்தியத்தை வாசிக்கிறார், ஆடுகிறார் என்று தெரிந்து கொண்டார், தான்ஸேன்..


உலகில் அக்பரைப் போன்ற செல்வாக்குள்ள வேறு சக்கரவர்த்தி எங்கும் மூன்று மணிக்கு இரவில் கண்விழித்து ஒரு சிறந்த சங்கீதக் கலைஞரது பாட்டைக் கேட்கக் காத்திருக்க மாட்டார்கள்...


அக்பரும், தான்ஸேனும் திருடர்களைப் போலக் குடிலுக்கு வெளியே குளிர் நடுக்கும் இரவில் ஒளிந்து உட்கார்ந்திருந்தனர்...


ஹரிதாஸ் பாடத்தொடங்கினார்... 


அந்த சங்கீதத்தில் லயித்து அக்பர் கண்களில் நீர் பெருக மௌனமாக அமர்ந்திருந்தார்...


பாட்டு முடிந்து மௌனமாகவே அரண்மனைக்குத் திரும்பினார்கள்... வழியில் இருவரும் பேசவேயில்லை...


வாயிலுக்கு வந்தவுடன் தான்ஸேனிடம், “இதுவரை உன்னைப் போன்ற சங்கீதக் கலைஞன் இல்லையென்று நினைத்திருந்தேன். இப்போது நீ எங்கே, அவர் எங்கே என்று தோன்றுகிறது....   

ஏன் உன் குருவைப் போல நீ வாசிக்க முடியவில்லை?” என்று கேட்டார்...


தான்ஸேன் உடனே,  

“விஷயம் வெகு தெளிவானது.  

நான் எதையோ அடைய வேண்டும் என்று வாசிக்கிறேன்....   

என் குரு எதையோ அடைந்து விட்டார்.... அதனால் வாசிக்கிறார்.... 

எனது சங்கீதத்திற்கு முன் சில லட்சியங்கள், தேவைகள் உள்ளன....

அவை எனக்கு கிடைக்க வேண்டும்....

தேவைக்காக பாடுவதில் என் பிராணன் முழுவதும் ஒருபொழுதும் பாடலில் இருப்பதில்லை....  

பாடுவதில் எப்போதும் குறையாகவே இருக்கிறேன்.....

பாடாமலே அவை எனக்குக் கிடைக்கும் என்றால், பாடிக் கிடைக்கும் சன்மானங்கள், பாடாமலே கிடைத்து விட்டால், பாட்டைத் தூக்கி உடைப்பில் போட்டு விடுவேன்.... 

சங்கீதம் எனக்கு ஒரு சாதனமே'' என்றார்...


வருங்காலத்தில், செல்வத்தில், புகழில், செல்வாக்கில்,  

சங்கீதம் ஒரு சாதனம் மட்டுமே....

சாதனம் ஒருபொழுதும் ஆத்மாவாகி விடுவதில்லை...


ஆனால் நீங்கள் இப்போது கேட்டு வந்தது ஒரு மகானுடைய சங்கீதம்....  

அவருக்கு எதையும் அடையும் சாதனம் அல்ல சங்கீதம்...


மேலே எதுவும் இல்லை,  

அவருக்குப் பாடி அடைவதற்காக.. பின்னால் ஏதோ இருக்கிறது,  

அவர் சங்கீதத்தைப் பெருகச் செய்து கொண்டு....

அதன் காரணமாக அவருள் பூரித்துப் பொங்குகிறது சங்கீதம்...


அவர் பாடுகிறார்.... 

எதையோ அடைந்து விட்டார்....

எதுவோ நிறைந்து விட்டது....

அது பெருகுகிறது.... 

அது ஒரு அனுபூதி....

ஒரு சத்தியம்....  

ஒரு இறைவன் உயிரில் நிறைந்துள்ளான்...  

இப்போது அது பெருகித் ததும்புகிறது...


அக்பர் மீண்டும் மீண்டும் கேட்கலானார்..

பிறகு எதற்காக பாடுகிறார்?"

எதற்காக, எதற்காக?” என்று்..


இயற்கைதான்.. நாமும் கேட்கிறோம்.. எதற்காகப் பாடுகிறார்? என்று...


தான்ஸேன் விடையளிக்கிறார்..

"நதி எதற்காக ஓடுகிறது?  

மலர் எதற்காக மலர்கிறது?   

சூரியன் எதற்காக உதயமாகிறான்?”

அதைப் போலத்தான் அவர் பாடுகிறார்....


‘எதற்காக?’


மனிதனுடைய புத்தி பிறப்பித்த கேள்வி...


மனிதனைத் தவிர எல்லாப் படைப்புகளும் 'எதற்காக' என்று கேட்பதில்லை. உலகம் முழுவதும் உள்ளுக்குள்ளே வாழ்கிறது...


மலர் மலர்கின்றது...

மலருவதிலேயே ஆனந்தம்...


சூரியன் உதிக்கிறான்...

உதிப்பதிலேயே ஆனந்தம்...


காற்று வீசுகிறது...

வீசுவதிலேயே ஆனந்தம்...


ஆகாயம் இருக்கிறது...

இருப்பதிலேயே ஆனந்தம்...


உங்கள் இருப்பில் அந்த லயம் இருந்தால்,  


நீங்களும் அந்த ஆனந்த பிரவாகத்தில் இருப்பீர்கள்...


ஆனந்தம் எங்கிருந்தும் வருவதில்லை...  

அங்கேயே இருக்கிறது...


ஓஷோ

Friday, October 3, 2025

ஜெனரிக் மருந்து..அடிப்படைத் தகவல்கள்

 நண்பர்களே! நம்ம எல்லாருக்கும் ஒரு பெரிய சந்தேகம் இருக்கும். "அரசு ஆஸ்பத்திரியில தர்ற மாத்திரைக்கும், பிரைவேட் டாக்டர்கிட்ட காசு கொடுத்து வாங்குற மாத்திரைக்கும் என்ன வித்தியாசம்?" உதாரணமா, சர்க்கரை மாத்திரை மெட்ஃபார்மின் 500 (Metformin 500) எடுத்துக்கலாம். ரெண்டும் ஒண்ணுதானா? இல்ல பிரைவேட்ல தர்றது 'ஒரிஜினல்' சரக்கா?


சிம்பிளா சொல்றேன், பெரிய வித்தியாசம் ஒண்ணுமே இல்லை!


மருந்து தயாரிக்கிற கம்பெனியில (Pharmaceutical) வேலை செய்யுற ஒரு நண்பர்கிட்ட இதைப் பத்திக் கேட்டேன். அவர் சொன்ன விஷயம் என்னன்னா, அவங்க தயாரிக்கிற பெரும்பாலான மருந்துகளே 'ஜெனரிக்' (Generic) மருந்துகள்தானாம். 'ஜெனரிக்'னா என்ன? 'பிராண்டட்'னா என்ன? இதைத் தெளிவா புரிஞ்சுகிட்டாலே, உங்க கேள்விக்கு பதில் கிடைச்சிடும்!


'Branded' மருந்துனா என்ன?


முதல்ல, ஒரு கம்பெனி பல வருஷங்கள், பல கோடிகள் செலவு செஞ்சு ஒரு நோய்க்கான புது மருந்தை (ஃபார்முலா) கண்டுபிடிக்குது. அதுக்கு அவங்க 'பேட்டன்ட்' (Patent) வாங்கிடுவாங்க. உதாரணமா, கிட்டத்தட்ட 20 வருஷத்துக்கு அந்த மருந்தை அவங்க மட்டும்தான் விற்க முடியும். அவங்க இஷ்டம் போல ஒரு 'பிராண்ட் நேம்' (Brand Name) வெச்சு, அதிக விலைக்கு விற்பாங்க. ஏன்னா, அவங்க போட்ட ரிசர்ச் செலவையெல்லாம் எடுக்கணும் இல்லையா? இதுதான் Branded Drug.


'Generic' மருந்துனா என்ன?


இப்போ ட்விஸ்ட் பாருங்க! அந்த 20 வருஷம் பேட்டன்ட் முடிஞ்சதும், அந்த மருந்தோட ஃபார்முலா பப்ளிக் ஆகிடும். இப்போ, வேற எந்த கம்பெனி வேணும்னாலும் அதே ஃபார்முலாவைப் பயன்படுத்தி, அதே மருந்தை தயாரிக்கலாம். இதுக்கு பேருதான் Generic Drug (பொது மருந்து).


ஆனா, 'ஃபார்முலா தெரிஞ்சா மட்டும் போதுமா, யார் வேணா செஞ்சிடலாமா?'ன்னு கேட்டா, முடியாது!


தரக்கட்டுப்பாடு (Quality Control):


அவங்க அந்த மருந்தை தயாரிச்சதும் மட்டும் போதாது. "இந்த மருந்து, அந்த ஒரிஜினல் பிராண்டட் மருந்து மாதிரியேதான் வேலை செய்யுது"ன்னு பல சோதனைகள் (Biosimilar tests) செஞ்சு நிரூபிக்கணும். அப்புறம், CDSCO, FDA மாதிரி பெரிய அரசு நிறுவனங்களோட அதிகாரிகள் நம்ம ஃபேக்டரிக்கு வந்து, நம்ம தயாரிப்பு முறையை ஆய்வு செய்வாங்க. அவங்க ஓகே சொன்னா மட்டும்தான் விற்க முடியும்!


அதுமட்டுமில்ல, எப்போ வேணும்னாலும் முன்னறிவிப்பு இல்லாம திடீர்னு வந்து செக் பண்ணுவாங்க (Surprise Audits). தரத்துல சின்னப் பிரச்சனை இருந்தாலும், கம்பெனியையே மூடச் சொல்லிடலாம்! அவ்வளவு ஸ்ட்ரிக்ட்!


அப்போ ஏன் விலை வித்தியாசம்?


அதனாலதான், ஒரிஜினல் கம்பெனி 20 வருஷம் ரிசர்ச் செலவெல்லாம் சேர்த்து ₹100-க்கு விக்கிற மாத்திரையை, இந்த ஜெனரிக் கம்பெனியால ரிசர்ச் செலவு இல்லாம, ₹15-க்கோ ₹20-க்கோ விற்க முடியுது. விலை கம்மியா இருக்குறதுனால இது தரம் கம்மியானதுன்னு தயவுசெஞ்சு நினைக்காதீங்க!


இந்த ஜெனரிக் மருந்துகளைத்தான் அரசு மருத்துவமனைகள்லயும், 'ஜன் ஔஷதி' (Jan Aushadhi) கடைகள்லயும் கொடுக்குறாங்க. சோ, அரசு மருத்துவமனையில தர்ற மெட்ஃபார்மினும், பிரைவேட்ல தர்ற மெட்ஃபார்மினும் (ஒரே கெமிக்கல் ஃபார்முலா இருந்தா) ஒண்ணுதான்! தைரியமா சாப்பிடுங்க!


குறிப்பு:


எதற்கும் ஒருமுறை உங்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி எடுப்பது சாலச்சிறந்தது.


இன்னும் சில சந்தேகங்கள்:


1. "பேட்டன்ட் முடிஞ்சப்புறமும் ஏன் அந்த 'Branded' மருந்தை இன்னும் விக்கிறாங்க?"


சிம்பிள். பேட்டன்ட் முடிஞ்சா, மத்தவங்களும் தயாரிக்கலாம்னுதான் அர்த்தமே தவிர, ஒரிஜினல் கம்பெனி தயாரிக்கக் கூடாதுன்னு சட்டம் இல்லை. அவங்க பிராண்ட் பெயரை வெச்சே விற்கலாம், அது அவங்க இஷ்டம்.


2. "அப்போ நாம ஏன் அதிக காசு கொடுத்து 'Branded' மருந்தையே வாங்கணும்?"


வாங்கணும்னு அவசியமே இல்லை! ஆனா, நாம வாங்குறதுக்கு சில காரணங்கள் இருக்கு:


பெயர் தெரியாது: 


நம்மில் பலருக்கும் மாத்திரையோட 'வேதிப் பெயர்' (Chemical Name - அதாவது Metformin) தெரியாது. நாம கடைல போய் அந்த 'பிராண்ட் பெயரை'ச் சொல்லிக் கேட்கிறோம்.


தவறான எண்ணம்: 


நம்ம மனசுல பதிஞ்சுபோன ஒரு தப்பான எண்ணம்: "விலை அதிகமா இருந்தா நல்லது, கம்மியா இருந்தா தரம் கம்மி"ன்னு நாமளே நினைச்சுக்குறது.


லாபம்: 


மருந்துக் கடைகளுக்கு, விலை கம்மியான ஜெனரிக் மருந்தை விக்கிறதை விட, விலை அதிகமான பிராண்டட் மருந்தை வித்தாதான் லாபம் அதிகம். அதனால அவங்க அதையே நமக்குத் தருவாங்க!


நிச்சயம் இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நினைக்கிறேன் நீங்க தெரிஞ்சுக்கிட்ட மாதிரி மத்தவங்களுக்கும் இதை பத்தி தெரியவைக்கிறதுக்காக லைக், ஷேர், கமெண்ட் செய்யுங்க..🙏


பகிர்வு

Thursday, October 2, 2025

UDGAM ?

வங்கிகளில் எப்போதோ ஒரு கணக்கை துவக்கி அதில் பணத்தை போட்டு வைத்திருப்போம் அல்லது நம் அப்பாவோ தாத்தாவோ யாரோ ஒருவர் போட்டு வைத்திருப்பார்கள்.காலப் போக்கில் அதை மறந்து போயிருப்போம்.திடீரென ஒருநாள் அந்த கணக்கு பற்றியும்,அதிலிருக்கும் பணம் பற்றியும் நினைவு வரும்.

அதை எப்படி தேடுவது?வங்கிக்கு நேரில் சென்று கேட்க வேண்டுமா?... என்றெல்லாம் கேள்விகள் வரும்.

இப்படி மறந்து போன அல்லது பல ஆண்டுகளாக,நமக்குச் சொந்தமான உரிமை கோரப்படாத வங்கிக் கணக்குகளை, அதிலிருக்கும் பணத்தை, உரிமை கோர இந்திய ரிசர்வ் வங்கி UDGAM என்றொரு வெப்சைட்டை உருவாக்கித் தந்துள்ளது.

அதென்ன UDGAM? 

Unclaimed Deposits- Gateway Access Information.

இதை கூகுளில் டைப் செய்யுங்கள்.ரிசர்வ் வங்கி உருவாக்கிய அந்த udgam வெப்சைட் வரும்.அதில் சென்று அது கேட்கும் தரவுகளைத் தந்து பதிவு செய்து கொள்ளுங்கள்.அதன் பின் எந்த வங்கிக் கணக்கைத் தேட வேண்டுமோ,அது குறித்து அந்த தளம் கேட்கும் தகவல்களைத் தந்து தேடுங்கள்.மீதியை அது பார்த்துக் கொள்ளும்.

தேவைப்படுபவர்கள் பயன்படுத்திக் 

Friday, September 26, 2025

Credit card or...

Your financial future is being destroyed right now. And you're probably helping it happen. Indians have gone completely mad copying the American lifestyle – living on borrowed money, spending what they don't have, and buying things they don't need. The credit card trap is swallowing an entire generation. Banks issued 700,000 new credit cards in August alone – a 7-month high. We now have 112.3 million active credit cards in India. That's not financial inclusion. That's financial destruction waiting to happen. "Buy a 65-inch TV for just Rs 2,000 per month!" Sounds amazing until you realise you're paying Rs 60,000 for an Rs 48,000 TV. The "easy EMI" just made you 37% poorer, but hey, you get to watch Netflix in 4K while drowning in debt. Americans have $1.17 trillion in credit card debt. Their "YOLO" culture destroyed their savings rate. Now we're copying the same playbook. "You live only once" became "You live only in debt." India is shifting from a savings-based economy to a consumption-based disaster. Our grandparents saved 35% of their income. We're saving less than 10% and borrowing the rest. Credit cards aren't making you rich. They're making banks rich while you pay 3-4% monthly interest on money you've already spent. Every swipe is a step toward financial slavery. Every EMI is a chain around your future income. Every "no-cost EMI" costs you your financial freedom.